அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்திற்கு தினந்தோரும் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆதார் திருத்தம், புதிய ஆதார் பதிவு செய்ய வந்து செல்கின்றனர், தற்போது கொரானா மூன்றாம் அலை பாதுகாப்பிற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு வகையில் விளம்பரம் செய்தும் தடுப்பூசிகள் அனைவருக்கும் போடும் பணியில் துரிதமாக செயல்பட்டுவரும் நிலையில் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மைய ஊழியர் ஆதார் பயன்பாட்டிற்காக வரும் பொது மக்களை காலையிலேயே வந்து டோக்கன் போட வேண்டும் என கூறுவதால் மக்கள் காலை 7 மணியிலிருந்தே வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்துக்கிடந்து ஊழியர் வந்ததும் மொத்தமாக ஒரே நேரத்தில் விண்ணப்பம் கொடுக்க கூட்டமாக அலுவலக வாசலில் நிற்பதும் அலைமோதுவதும், அவர்கள் விண்ணப்பத்தினை கூட்டத்தின் நடுவே மாஸ்க் கூட அணியாமல் நின்றுகொண்டு டோக்கன் 40 நபர்களுக்கு மட்டும் தான் என கூறி டோக்கன் போடுவதும் மற்றவர்களை திரும்ப போகச் சொல்வதாலும் மக்கள் விரக்தியிலேயே திரும்புகின்றனர் தொடர்ந்து இது போன்ற சூழல் நிலவுவதால் மக்கள் ஆதார் சேவை மீது வெருப்புனர்வை ஏற்படுத்தியுள்ளது வருவாய் வட்டாட்சியர் அலுவகத்தில் நுழைவு வாயிலிலேயே சமூக இடைவெளியின்றி பொது மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமல் சிறு சிறு கடைகள் நடத்தி வருபவர்களை மட்டும் வட்டாட்சியர் அரசின் விதிமுறைகளை பின்பற்ற கடுமை காட்டுவது எந்த வகையில் நியாயமென கேள்வியை எழுப்பியுள்ளது மேலும் கொரானா பேரழிவு காலங்களில் முகக்கவசம் அணியாமல் ஆதார் சேவை தேவைக்காக கூடும் மக்கள் மத்தியில் நின்று கொண்டு டோக்கன் விணியோகம் செய்வதும் அவற்றை வட்டாட்சியர் கண்டுகொள்ளாததும் கொரானா தொற்று அதிகரிக்கும் ஆபத்து உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா? என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.


சையது ஹசன்ஷாஅலி

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்

தேசிய மக்களாட்சி இதழ் ஆசிரியரும் நிறுவனருமான Dr ராஜமோகன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

தேசிய மக்களாட்சி இதழ் ஆசிரியரும் நிறுவனருமான Dr ராஜமோகன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


தேசிய மக்களாட்சி புலனாய்வு இதழ் ஆசிரியரும் நிறுவனருமான மற்றும் தேசிய லஞ்ச ஊழல் ஏதிர்ப்பு இயக்கம், தேசிய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம், தேசிய மக்களாட்சி பேரவையின் தலைவருமான தன் வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் நலன் சார்ந்த சமூக பணிகளில் ஈடுபட்டு அலப்பறியா சேவையாற்றி வரும் சமத்துவ செம்மல் அய்யா  Dr T.R. ராஜமோகன் அவர்களுக்கு தேசிய மக்களாட்சி இதழின் ஆசிரியர் குழு சார்பிலும் நிருபர்கள் சார்பிலும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்வாங்கு வாழ அன்போடு வாழ்த்துகிறோம்....

அன்புடன்...

ஆசிரியர் குழு மற்றும் நிருபர்கள்

கலசபாக்கம் அருகே சிறு கிளாம்பாடி கிராமத்தில் டெய்லர் வெட்டிக்கொலை

கலசபாக்கம் அருகே சிறு கிளாம்பாடி கிராமத்தில் டெய்லர் வெட்டிக்கொலை...



கலசபாக்கம் அருகே தகராறில் டெய்லர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன் - மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

டெய்லர் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிறுகிளாம்பாடி காலனியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 44), டெய்லர்.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் துரை என்பவருக்கும் நிலம் வாங்குவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த துரை, அவரது மனைவி தீபா மற்றும் துரையின் தந்தை முனுசாமி ஆகியோர் சேர்ந்து துரைக்கண்ணுவை உருட்டு கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



கணவன் - மனைவி உள்பட 3 பேர் கைது

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரை, தீபா மற்றும் முனுசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகராறில் டெய்லர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட செய்தியாளர் ராமதாஸ் திருவண்ணமலை

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக தற்போதைய எஸ் பியான ஜெயக்குமாரே நீடிக்க வேண்டும் என்கிற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜெயக்குமாரின் இடமாற்ற உத்தரவை இரத்து செய்திருக்கிறது அரசு

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக தற்போதைய எஸ் பியான ஜெயக்குமாரே நீடிக்க வேண்டும் என்கிற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜெயக்குமாரின் இடமாற்ற உத்தரவை இரத்து செய்திருக்கிறது அரசு....

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அசாதாரண சூழ்நிலைக்கு பிறகு அமைதியான தூத்துக்குடி, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பின் மூலம் மீண்டும் அசாதார சூழ்நிலைக்கு சென்றது. அப்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டவர்தான் எஸ்.ஜெயக்குமார். இவரின் வருகைக்கு பிறகு போலீஸ் – பொதுமக்களிடையே இருந்து வந்த உக்கிரம் குறைந்திருந்தது. இருதரப்புமே எங்கேயும் முட்டிக் கொள்ளவில்லை. மனதளவில் மக்களையும், காவல்துறையினரையும் கட்டிப்போட்டார் எஸ்.பி.

இந்தநிலையில் எஸ்.பி ஜெயக்குமார் மாற்றப்பட்தாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எட்டு மாதத்தில் ஏன் மாற்றப்பட்டார் என்கிற கேள்வி எழுந்தது. சிறு சிறு அளவி எழுந்த புகார் என்றும், அவரே விரும்பி மாற்றம் கேட்டார் என்றும் தகவல் பரவி வந்தன.

இதற்கிடையே மாவட்ட எஸ்.பியின் மாற்றல் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்து தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள சத்யா ரிசார்ட்ல் தங்கியிருந்த தமிழக முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டதாம். தற்போதைய எஸ்.பியே தொடர்ந்து சில காலம் தூத்துக்குடியில் எஸ்.பியாக இருக்க வேண்டும். பிரச்னைகளை எளிதில் கையாளுகிறார் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்ட முதல்வர், நேற்று வெளியிடப்பட்ட உத்தரவில் ஜெயக்குமாரின் மாற்றம் உத்தரவை ரத்து செய்ய பரிந்துரை செய்தாராம். அதன் அடிப்படையில் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக ஜெயக்குமாரே பணியாற்றப்போகிறார் என்கிற தகவல் சொல்லப்படுகிறது.

K.செங்கோல் மணி  மாவட்ட நிருபர்.

காயல் பட்டிணத்தில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மணை பட்டா தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

 காயல் பட்டிணத்தில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மணை பட்டா  தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் காயல் அப்பாஸ்  வலியுறுத்தல்...

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

தூத்துக்குடி மாவட்டம். காயல் பட்டிணத்தில் ஏழை மக்கள் ஆண்டாண்டு காலமாக சொந்த வீடு இல்லாமல் வாடகை  வீட்டில் வசித்து வருகிறார்கள் விட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் வாடகை பணம் ஏற்றி வசிலிப்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வாடகை பணம் கொடுக்க முடியாமல் மிகவும் சிரமம்பட்டு வருகிறார்கள்.

மேலும் அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி தரும் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள்  சிறப்பு கவனம் செலுத்தி காயல் பட்டிணத்தில்  சொந்த வீடு இல்லாத எழை மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

எனவே : காயல் பட்டிணத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமைப்பு செய்ய பட்டிருக்கிறதா என்று உடனடியாக ஆய்வு செய்து ஆக்கிரமைப்பு செய்ய பட்ட நிலங்களை அரசு கை பற்றி சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமைப்பு செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .

வேட்டவலத்தில் இலவச கண சிகிச்சை முகாம்

வேட்டவலத்தில் இலவச கண சிகிச்சை முகாம்...

மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் திருவண்ணாமலை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆவூர் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் .தலைமை வட்டாரமருத்துவ அலுவலர் வேட்டவலம் முன்னிலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் துவக்கிவைத்து வாழ்த்துரை ஆவூர் ஊராட்சி மன்ற தலைவர்.கண்பரிசோதனை செய்த கண்மருத்துவ உதவியாளர்கள் ரவீந்திரன் ரமேஷ்ராவ் ஜாஹீர் உசேன். 12 கண்புரை நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.நன்றியுரை சந்திரசேகர் சுகாதார ஆய்வாளர் மற்றும் தசரதன் முகாமுக்கான உதவிகளை அன்னை நைட்டிங்கேல் அம்மையார் சமுதாய கல்லூரி நிறுவன பயிற்சி மாணவிகள் செய்தனர்.


இராம மணிமாறன்

துணை ஆசிரியர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சொரக்கொளத்தூர் கிழக்கு வனபகுதியில் 30 வயது மதிக்கதக்க பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு முழுநிர்வாண நிலையில் பிணம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொரக்கொளத்தூர் கிழக்கு வனபகுதியில் பெயர்விலாசம் தெரியாத 30 வயது மதிக்கதக்க பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு முழுநிர்வாண  நிலையில் பிணம்.

கலசபாக்கத்தை அடுத்த சொரகொளத்தூர் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை எதிரே காப்புக்காடு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் கலசபாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். காப்புக்காட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாகக் கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், இதனால் ஏற்பட்ட தகராறால் அவரை மர்மநபர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட மர்மநபர் காமவெறியால் பெண்ணின் உடல் பாகங்களை பல்லால் கடித்துள்ளார். அதற்கான அடையாளங்கள் பெண்ணின் உடலில் பல இடத்தில் இருந்தன.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் ‘மியா’ மற்றும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மோப்பநாய் பெண்ணின் பிணத்தை மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடியது. கைரேைக நிபுணர்கள் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் பிணம் கிடந்த இடத்தில் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேலாடை டாப்ஸ் ஆகியவை கிடந்தன. அதை போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

கற்பழித்துக் கொலை?

கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரை யாரேனும் கடத்தி வந்து காட்டில் வைத்து கற்பழித்துக் கொலை செய்தனரா? அல்லது பலரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைக்கு நேர் எதிேர காப்புக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் மதுப்பிரியர்கள் யாரேனும் குடித்துவிட்டு, போதையில் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொரகொளத்தூர் காப்புக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட செய்தியாளர் ராமதாஸ் திருவண்ணாமலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழகறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் நடைப்பெற்றது தென்காசி வடக்கு மாவட்ட பொருப்பாளர் அய்யாத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார்.

தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி , மற்றும் ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு  அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து பொது மக்களுடன் கலந்துரையாடினார் 


முன்னதாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய வர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார் 


பொதுமக்கள்.உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது எனது முதல் பணி எனவும் எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அதிகரிக்கக்கூடும் இதற்கு நான் பநான் பொறுப்பு என கூறினர்.

  இந்த நிகழ்ச்சியில் தென்காசி MP. தனுஷ் குமார், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா,முன்னாள் அமைச்சர் தங்க வேலு ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தெண்டர்கள் 20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தென்காசி மாவட்டம் கோவிந்தராஜ்..

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரம்  கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமத்தில் முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கி.சு.சமீரன் இ.ஆ.ப.அவர்கள் தலைமை வகித்தார்கள். மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் V.M ராஜலட்சுமி அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுப் பெட்டகங்களை வழங்கினார்.

 நிகழ்ச்சியில்  திருவேங்கடம் வட்டாட்சியர் கண்ணன் , குருவிகளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் கருப்பசாமி சிவக்குமார்சுகாதாரத் துறை துணை இயக் குநர் சுகாதாரப்ப ணிகள் மருத்துவர் அருணா அவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக், குமார் , கலிங்கப்பட்டி மருத்துவ அலுவலர் மருத்துவர் சிதம்பர ராஜா, மினி கிளினிக் மருத்துவ அலுவலர்  நித்யா , வருவாய் ஆய்வாளர் , VAO பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள்,  பஞ்சாயத்து தனி அலுவலர் செல்லத்துரை, சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள்  சுகாதார ஆய்வாளர்கள் கமலநாதன், சின்னத்தம்பி, கண்ணன், குருமூர்த்தி, ஆகாஷ் , அபிஜேஷ், சங்கரபாண்டியன் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


கோவிந்தராஜ்

மாவட்ட செய்தியாளர் தென்காசி..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலை பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்  குகன் தலைமையில் நடைப்பெற்றது,

ஒன்றிய செயலாளர் NHM பாண்டியன் முன்னிலை வகித்தார் தென்காசி வடக்கு மாவட்ட பொருப்பா ளரும் சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் அவர்கள் 207-மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர்.


முன்னதாக பள்ளியின் மாணவ மாணவிகள் சிலம்பா ஆட்டத்துடனும் மேளதாளத்துடன் வரவேற்றார்கள்


மேலும் சிலம்பம் விளையாட்டில் மாநில மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 22. மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கியும் 


திருநெல்வேலியில் நடைப்பெற்ற நோவா மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஐஸ்வர்யா, மாரிச்செல்வி, முருகேஸ்வரி ஆகியோர்க்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது


 நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரவேல், ஜெகநாதன், சிவக்குமார், அழகன், ஐய்யத்துரை, தயாபரசிங், மற்றும் சிலம்பம் மாஸ்டர் வடிவேல்முருகன், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைசெயலாளர் வீரப்பாண்டியன், கிடாரக்குளம் கூட்டுறவு சங்க தலைவர் வீரபாண்டி , அம்மா பேரவை தலைவர் வீராண் விஜயகுமார்

மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் அந்தோணிச்சாமி,   ஒன்றிய துணை செயலாளர் தர்மர் (எ)பெரியசாமி, ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் செல்லத்துரை, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பாலாஜி, பேரூர் கழக செயலாளர் 

K.P. சுப்பிரமணியன், பேரூர் துணை செயலாளர் சேர்மகனி (எ) கணேசன், இளைஞர் இளம்பெண் பாசறை இணை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ்,  திம்பனம்பட்டி கூட்றவு இயக்குனர் ராமசாமி ஒன்றிய இளைஞரணி வெள்ளத்துரை, ஒன்றிய கவுன்சிலர் திருஞானம் மாவட்ட M.G.R.மன்ற துணை செயலாளர் K.P.ராமலிங்கம் கூட்டுறவு சங்க தலைவர் பாண்டித்துரை, கிளை செயலாளர் வெள்ளத்துரை, மாடசாமி, காடுவெட்டி கோயில் பிச்சை, பால்பாண்டி, கதிரேசன், மணிகண்டன், வீரபாண்டி, சுந்தர்ராஜா, மந்திரம், பாலகிருஷ்ணன், காவலாகுறிச்சி வெள்ளத்துரை மாரியப்பன், பாலசுப்பிரமணியன், மாடசாமி, மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் 

மற்றும் கழக நிர்வாகிகள்  கலந்துகொண்டனர் நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியை அமுதவல்லி நன்றி உரையாற்றினார்.


தென்காசி மாவட்ட செய்தியாளர் கோவிந்தராஜ்

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...